திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
Sep 10, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை எச்சரித்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஓமன், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 34 விமானச் சேவைகள் உள்ளதால், ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைப்பேசி எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும், விமானங்களில் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய முனைய மேலாளர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன், விமான நிலையம் முழுவதும் சோதனை

செய்தனர்.இருப்பினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை அடுத்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த, சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: trichy airportBomb threat!
ShareTweetSendShare
Previous Post

கேரளா: ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

Next Post

ஆண்களுக்கான முதல் கருத்தடை ஊசி: ஐசிஎம்ஆர் சாதனை!

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies