நமது இராணுவத்தின் பங்கை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்!
Sep 30, 2025, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது இராணுவத்தின் பங்கை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழா உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான இராணுவக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும். மேலும், இந்த நிகழ்வின்போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால இராணுவக் களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான ‘புராஜெக்ட் உத்பவ்’ திட்டத்தையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவர், முதல் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இந்த விழாவை முதன்முறையாக ஏற்பாடு செய்ய முயற்சித்த யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷனை (யு.எஸ்.ஐ.) நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த இந்திய இராணுவ பாரம்பரிய விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு, கடந்த சில தசாப்தங்களில் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் விலைமதிப்பற்ற பங்கை (இந்தியாவின் இராணுவ வரலாறு) பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உருவாகும். நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உத்வேகம் பெறுவார்கள் ” என்றார்.

இந்த விழாவானது, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் மகிமை வாய்ந்த  இராணுவ வரலாறு மற்றும் கலாச்சாரம் இருந்தபோதிலும், அதன் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. 21-ம் நூற்றாண்டில் ஆயுதப்படைகளை அபிவிருத்தி செய்வதற்கான இலக்குகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அதன் தாக்கத்தின் மூலம் இராணுவ வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் பொது ஈடுபாட்டின் களத்தில் ஒரு அளவுகோலை உருவாக்க முயல்கிறது என்றால் மிகையாகாது.

Tags: Rajnath Singhdefence ministerindian militaryheritage festival
ShareTweetSendShare
Previous Post

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!

Next Post

கடலில் விழுந்த ககன்யான் விண்கலம் மீட்பு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies