நமது இராணுவத்தின் பங்கை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது இராணுவத்தின் பங்கை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 21, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் இந்திய இராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழா உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான இராணுவக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும். மேலும், இந்த நிகழ்வின்போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால இராணுவக் களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான ‘புராஜெக்ட் உத்பவ்’ திட்டத்தையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் தலைவர், முதல் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ, கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இந்த விழாவை முதன்முறையாக ஏற்பாடு செய்ய முயற்சித்த யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷனை (யு.எஸ்.ஐ.) நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த இந்திய இராணுவ பாரம்பரிய விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு, கடந்த சில தசாப்தங்களில் நாட்டின் பாதுகாப்பில் ஆயுதப்படைகளின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் விலைமதிப்பற்ற பங்கை (இந்தியாவின் இராணுவ வரலாறு) பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உருவாகும். நமது ஆயுதப் படைகளின் பங்கைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உத்வேகம் பெறுவார்கள் ” என்றார்.

இந்த விழாவானது, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் மகிமை வாய்ந்த  இராணுவ வரலாறு மற்றும் கலாச்சாரம் இருந்தபோதிலும், அதன் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. 21-ம் நூற்றாண்டில் ஆயுதப்படைகளை அபிவிருத்தி செய்வதற்கான இலக்குகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், அதன் தாக்கத்தின் மூலம் இராணுவ வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் பொது ஈடுபாட்டின் களத்தில் ஒரு அளவுகோலை உருவாக்க முயல்கிறது என்றால் மிகையாகாது.

Tags: Rajnath Singhdefence ministerindian militaryheritage festival
ShareTweetSendShare
Previous Post

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!

Next Post

கடலில் விழுந்த ககன்யான் விண்கலம் மீட்பு!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies