இங்கிலாந்து மோசமான பேட்டிங் - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இங்கிலாந்து மோசமான பேட்டிங் – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் நேற்றையப் போட்டியில் 229 ரன்களை வித்தியாசத்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றையப் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் முதல் ஓவரின் முதல் பந்தை பௌண்டரியாக அடிக்க, இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரை அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் இணை சிறப்பாக விளையாடி வந்தது. பின்னர் 20 வது ஓவரில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ரீசா ஹென்ட்ரிக்ஸ் 9 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 85 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து ஐடன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினர்.

இதில் ஐடன் மார்க்ராம் 44 பந்துகளில் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 12 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 67 பந்துகளில் 109 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 42 பந்துகளில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டோப்லி 3 விக்கெட்களும், கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது.

இதை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணயின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 2 வது ஓவரில் 10 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 வது ஓவரில் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்பு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வூட் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அட்கின்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மார்க் வூட் 43 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 22 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா 2 விக்கெட்களும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 67 பந்துகளில் 109 ரன்களை அடித்த ஹென்ரிச் கிளாசென்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: world Cup Cricketengland vs south africa
ShareTweetSendShare
Previous Post

திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து !

Next Post

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies