இங்கிலாந்து மோசமான பேட்டிங் - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

இங்கிலாந்து மோசமான பேட்டிங் – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் நேற்றையப் போட்டியில் 229 ரன்களை வித்தியாசத்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 11:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்றையப் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் குயின்டன் டி காக் முதல் ஓவரின் முதல் பந்தை பௌண்டரியாக அடிக்க, இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவரை அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்கினார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் இணை சிறப்பாக விளையாடி வந்தது. பின்னர் 20 வது ஓவரில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 61 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ரீசா ஹென்ட்ரிக்ஸ் 9 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 75 பந்துகளில் 85 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து ஐடன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினர்.

இதில் ஐடன் மார்க்ராம் 44 பந்துகளில் 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 12 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 67 பந்துகளில் 109 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 42 பந்துகளில் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரீஸ் டோப்லி 3 விக்கெட்களும், கஸ் அட்கின்சன் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது.

இதை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணயின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 2 வது ஓவரில் 10 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 வது ஓவரில் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்பு களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வூட் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அட்கின்சன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மார்க் வூட் 43 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 22 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா 2 விக்கெட்களும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 67 பந்துகளில் 109 ரன்களை அடித்த ஹென்ரிச் கிளாசென்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: world Cup Cricketengland vs south africa
Share
Tweet
SendShare
Previous Post

திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து !

Next Post

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies