நவராத்திரி விழா: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
Jan 14, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவிலில் துர்கா தேவியை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நவராத்திரி விழா, பெண் தெய்வமான துர்கா தேவியின் 9 வடிவங்களையும் வைத்து, 9 நாட்கள் நடைபெறும் விழாவாகும். நிறைவு நாளான 9-ம் நாள், மாகா நவமி என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நவராத்திரி விழாவின் மிகவும் புனிதமான நாட்களில் ‘மகா நவமி’யும் ஒன்று. இது துர்கா தேவி ‘மகிஷாசுரன்’ என்ற அரக்கனை வென்றதைக் குறிக்கிறது. இது ‘மா’ துர்க்கையின் வடிவங்களில் ஒன்றான ‘சித்திதாத்ரி’ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, இவ்விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், துர்கா தேவியின் வடிவங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவிக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் கோவில் அமைந்திருக்கிறது. இது இந்து யாத்ரீகர்களுக்கான மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஆகவே, இக்கோவிலில் நவராத்திரி விழா களைகட்டும். குறிப்பாக, விழாவின் நிறைவுநாளான மகா நவமியன்று இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அந்த வகையில், 9-வது நாளான இன்று வைஷ்ணவ தேவியை தரிசிக்க காலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து தேவியை தரிசித்தனர். முன்னதாக, ‘மகா அஷ்டமி’ விழாவான நேற்று, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ​​ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கோவிலில் தரிசனம் செய்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்தார்.

தொடர்ந்து, ஆலய வாரியத்தின் இணையதளத்தில் ‘நேரடி தரிசன வசதி’ மற்றும் இருமொழி சார்ட்போர்டை பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், மாதா வைஷ்ணவ தேவி புனித யாத்திரை பற்றி, ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘தி பக்தி ஆஃப் ஷக்தி’ என்கிற யாத்திரை வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட்டார்.

இதேபோல, நவராத்திரி விழாவின் நிறைவு நாளான ‘மகா நவமி’யை முன்னிட்டு, அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தலைநகர் டெல்லியிலுள்ள ஜாண்டேவாலன் கோவில், சத்தர்பூர் கோவில் ஆகிய கோவில்களில் நடந்த காலை ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தேவியை தரிசனம் செய்தனர்.

இது தவிர, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவிலிலும் அதிகாலை ‘ஆரத்தி’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தேவியை தரிசித்தனர்.

Tags: jammu kashmirvaishno devi templeMaha navamiDevotees
ShareTweetSendShare
Previous Post

‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 143 இந்தியர்கள் டெல்லி வருகை!

Next Post

பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா !

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies