திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இடமாக வட சீனக் கடல் பகுதி கருதப்படுகிறது. இந்த கடற்பகுதி வழியாகத்தான் உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கையாளப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அதேபோல, வட சீனக் கடல் பகுதியில்தான் மீன் வளமும் அதிகம் உள்ளது. எனவே, உலகின் 50 சதவீத மீன்பிடிக் கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும், வட சீனக் கடல் பகுதி நீர்மட்டம் குறைவான கடல் பகுதியாகும். இப்பகுதி மீது சீனாவும், பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடி வருகின்றன. எனவே. இது சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் தனது நாட்டுக் கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்குத் தேவையான மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமஸ் ஷோல் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீதும், அதனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஒரு வினியோகப் படகு மீதும், தங்களது எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சீனக் கடற்படை கப்பல்கள் மோதி தாக்கி இருக்கிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இது சீனாவால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக, அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், இதனை மறுத்திருக்கும் சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர, வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், அந்நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Philippineschinaship
ShareTweetSendShare
Previous Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies