திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
Aug 21, 2025, 11:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இடமாக வட சீனக் கடல் பகுதி கருதப்படுகிறது. இந்த கடற்பகுதி வழியாகத்தான் உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கையாளப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அதேபோல, வட சீனக் கடல் பகுதியில்தான் மீன் வளமும் அதிகம் உள்ளது. எனவே, உலகின் 50 சதவீத மீன்பிடிக் கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும், வட சீனக் கடல் பகுதி நீர்மட்டம் குறைவான கடல் பகுதியாகும். இப்பகுதி மீது சீனாவும், பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடி வருகின்றன. எனவே. இது சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் தனது நாட்டுக் கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்குத் தேவையான மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமஸ் ஷோல் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீதும், அதனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஒரு வினியோகப் படகு மீதும், தங்களது எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சீனக் கடற்படை கப்பல்கள் மோதி தாக்கி இருக்கிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இது சீனாவால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக, அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், இதனை மறுத்திருக்கும் சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர, வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், அந்நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinashipPhilippines
ShareTweetSendShare
Previous Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies