திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இடமாக வட சீனக் கடல் பகுதி கருதப்படுகிறது. இந்த கடற்பகுதி வழியாகத்தான் உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கையாளப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அதேபோல, வட சீனக் கடல் பகுதியில்தான் மீன் வளமும் அதிகம் உள்ளது. எனவே, உலகின் 50 சதவீத மீன்பிடிக் கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும், வட சீனக் கடல் பகுதி நீர்மட்டம் குறைவான கடல் பகுதியாகும். இப்பகுதி மீது சீனாவும், பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடி வருகின்றன. எனவே. இது சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் தனது நாட்டுக் கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்குத் தேவையான மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமஸ் ஷோல் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீதும், அதனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஒரு வினியோகப் படகு மீதும், தங்களது எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சீனக் கடற்படை கப்பல்கள் மோதி தாக்கி இருக்கிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இது சீனாவால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக, அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், இதனை மறுத்திருக்கும் சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர, வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், அந்நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinashipPhilippines
Share
Tweet
SendShare
Previous Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies