திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இடமாக வட சீனக் கடல் பகுதி கருதப்படுகிறது. இந்த கடற்பகுதி வழியாகத்தான் உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து கையாளப்படுகிறது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அதேபோல, வட சீனக் கடல் பகுதியில்தான் மீன் வளமும் அதிகம் உள்ளது. எனவே, உலகின் 50 சதவீத மீன்பிடிக் கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும், வட சீனக் கடல் பகுதி நீர்மட்டம் குறைவான கடல் பகுதியாகும். இப்பகுதி மீது சீனாவும், பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடி வருகின்றன. எனவே. இது சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதியில்தான் பிலிப்பைன்ஸ் தனது நாட்டுக் கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்குத் தேவையான மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமஸ் ஷோல் பகுதி அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீதும், அதனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான ஒரு வினியோகப் படகு மீதும், தங்களது எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சீனக் கடற்படை கப்பல்கள் மோதி தாக்கி இருக்கிறது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இது சீனாவால் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக, அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், இதனை மறுத்திருக்கும் சீனா, “பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர, வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், அந்நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinashipPhilippines
ShareTweetSendShare
Previous Post

18 மணி நேரத்தில் புயல் – மக்களே எச்சரிக்கை!

Next Post

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் : வெல்லப்போவது யார் ?

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies