அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!
Jul 24, 2025, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய அமெரிக்கரான ஜாஸ்மர் சிங். இவர் இந்தியாவுக்கு வருவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனவே, தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் இறங்கி வந்து, ஜாஸ்மர் சிங்கை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், ஜாஸ்மரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாஸ்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.

ஆனால், இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நிச்சயமாக இனவெறித் தாக்குதல்தான் என்று ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறியிருக்கிறார்.

காரணம், அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், இதே நியூயார்க் நகரில் தலையில் டர்பன் அணிந்தபடி பேருந்தில் பயணித்த 19 வயது சிறுவனை, 26 வயது அமெரிக்க இளைஞர் கிறிஸ்டோபர் பிலிப்பைக்ஸ், டர்பனை அகற்றச் சொல்லி தாக்கினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நியூயார்க்கில் கொல்லப்பட்ட ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறுகையில், “சீக்கிய சமூகத்தினரே எச்சரிக்கையாக இருங்கள். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் போல யாரும் தங்களது தந்தையையோ, சகோதரர் அல்லது மகனையோ இழந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம், ஜாஸ்மர் சிங் தாக்குதல் குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “ஜஸ்மர் சிங் தனது நகரத்தை நேசித்தார். அவரது துயர மரணத்துக்கு நியூயார்க் மக்கள் அனைவரின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Indianamericakilled
ShareTweetSendShare
Previous Post

2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Related News

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies