அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!
Sep 8, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய அமெரிக்கரான ஜாஸ்மர் சிங். இவர் இந்தியாவுக்கு வருவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனவே, தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் இறங்கி வந்து, ஜாஸ்மர் சிங்கை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், ஜாஸ்மரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாஸ்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.

ஆனால், இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நிச்சயமாக இனவெறித் தாக்குதல்தான் என்று ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறியிருக்கிறார்.

காரணம், அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், இதே நியூயார்க் நகரில் தலையில் டர்பன் அணிந்தபடி பேருந்தில் பயணித்த 19 வயது சிறுவனை, 26 வயது அமெரிக்க இளைஞர் கிறிஸ்டோபர் பிலிப்பைக்ஸ், டர்பனை அகற்றச் சொல்லி தாக்கினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நியூயார்க்கில் கொல்லப்பட்ட ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறுகையில், “சீக்கிய சமூகத்தினரே எச்சரிக்கையாக இருங்கள். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் போல யாரும் தங்களது தந்தையையோ, சகோதரர் அல்லது மகனையோ இழந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம், ஜாஸ்மர் சிங் தாக்குதல் குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “ஜஸ்மர் சிங் தனது நகரத்தை நேசித்தார். அவரது துயர மரணத்துக்கு நியூயார்க் மக்கள் அனைவரின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: americakilledIndian
ShareTweetSendShare
Previous Post

2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Related News

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies