அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!
Jun 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய அமெரிக்கரான ஜாஸ்மர் சிங். இவர் இந்தியாவுக்கு வருவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனவே, தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் இறங்கி வந்து, ஜாஸ்மர் சிங்கை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், ஜாஸ்மரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாஸ்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.

ஆனால், இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நிச்சயமாக இனவெறித் தாக்குதல்தான் என்று ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறியிருக்கிறார்.

காரணம், அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், இதே நியூயார்க் நகரில் தலையில் டர்பன் அணிந்தபடி பேருந்தில் பயணித்த 19 வயது சிறுவனை, 26 வயது அமெரிக்க இளைஞர் கிறிஸ்டோபர் பிலிப்பைக்ஸ், டர்பனை அகற்றச் சொல்லி தாக்கினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நியூயார்க்கில் கொல்லப்பட்ட ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறுகையில், “சீக்கிய சமூகத்தினரே எச்சரிக்கையாக இருங்கள். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் போல யாரும் தங்களது தந்தையையோ, சகோதரர் அல்லது மகனையோ இழந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம், ஜாஸ்மர் சிங் தாக்குதல் குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “ஜஸ்மர் சிங் தனது நகரத்தை நேசித்தார். அவரது துயர மரணத்துக்கு நியூயார்க் மக்கள் அனைவரின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: americakilledIndian
ShareTweetSendShare
Previous Post

2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies