அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்திய அமெரிக்கரான ஜாஸ்மர் சிங். இவர் இந்தியாவுக்கு வருவதற்காக ஆயத்தமாகி வந்தார். எனவே, தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் இறங்கி வந்து, ஜாஸ்மர் சிங்கை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதில், ஜாஸ்மரின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாஸ்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த வாகனத்தின் டிரைவரை கைது செய்தனர்.

ஆனால், இது ஒரு இனவெறித் தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நிச்சயமாக இனவெறித் தாக்குதல்தான் என்று ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறியிருக்கிறார்.

காரணம், அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், இதே நியூயார்க் நகரில் தலையில் டர்பன் அணிந்தபடி பேருந்தில் பயணித்த 19 வயது சிறுவனை, 26 வயது அமெரிக்க இளைஞர் கிறிஸ்டோபர் பிலிப்பைக்ஸ், டர்பனை அகற்றச் சொல்லி தாக்கினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நியூயார்க்கில் கொல்லப்பட்ட ஜாஸ்மரின் மகன் முல்தானி கூறுகையில், “சீக்கிய சமூகத்தினரே எச்சரிக்கையாக இருங்கள். உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னைப் போல யாரும் தங்களது தந்தையையோ, சகோதரர் அல்லது மகனையோ இழந்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம், ஜாஸ்மர் சிங் தாக்குதல் குறித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறுகையில், “ஜஸ்மர் சிங் தனது நகரத்தை நேசித்தார். அவரது துயர மரணத்துக்கு நியூயார்க் மக்கள் அனைவரின் சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அப்பாவி உயிரைப் பறித்த வெறுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: americakilledIndian
Share
Tweet
SendShare
Previous Post

2 நாள் பயணமாக அஸ்ஸாம், அருணாச்சல் செல்லும் ராஜ்நாத் சிங்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் பேட்டிங் !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies