லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!
Jan 14, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் முன்னணி தீவிரவாதியும், லக்‌ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், அசுரத்தனமான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 4,500-க்கும் மேற்பட்ட காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆள் பலமும், ஆயுத பலமும் கிடையாது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு யாராவது உதவி இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஈரான் நாட்டின் அமோக ஆதரவு இருப்பதால், அந்நாடு நிச்சயமாக ஆயுத உதவிகளை வழங்கி இருக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரானுடன் நட்பு பாராட்டும் ரஷ்யாவும் ஆயுத சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுக்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணித் தீவிரவாதியும், லஷ்கர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார்.

அப்போது, காஸாவில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹஷிம் அலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகவலை டைம்ஸ் அல்ஜீப்ரா செய்திச் சேனல் உறுதிப்படுத்தி இருக்கிறது. லக்‌ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு, அத்தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தகவல், அந்த அமைப்பினரிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistani terroristLeT commanderhashim ali akramshot deadgaza
ShareTweetSendShare
Previous Post

கமலாலயத்தில் ஆயுத பூஜை!

Next Post

தசரா பண்டிகை! – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies