லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!
Aug 20, 2025, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஷ்கர் இ தொய்பா தளபதி காஸாவில் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Oct 23, 2023, 07:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் முன்னணி தீவிரவாதியும், லக்‌ஷர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 7-ம் தேதி காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்குள் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், அசுரத்தனமான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 4,500-க்கும் மேற்பட்ட காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆள் பலமும், ஆயுத பலமும் கிடையாது. ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு யாராவது உதவி இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஈரான் நாட்டின் அமோக ஆதரவு இருப்பதால், அந்நாடு நிச்சயமாக ஆயுத உதவிகளை வழங்கி இருக்கலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. மேலும், ஈரானுடன் நட்பு பாராட்டும் ரஷ்யாவும் ஆயுத சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுக்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவி இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணித் தீவிரவாதியும், லஷ்கர் இ தொய்பா தளபதியுமான ஹஷிம் அலி அக்ரம் காஸாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறார்.

அப்போது, காஸாவில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹஷிம் அலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகவலை டைம்ஸ் அல்ஜீப்ரா செய்திச் சேனல் உறுதிப்படுத்தி இருக்கிறது. லக்‌ஷர் இ தொய்பாவின் இணை நிறுவனரான ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹஷிம் அலி அக்ரம் மறைவு, அத்தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஹஷிம் அலி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தகவல், அந்த அமைப்பினரிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistani terroristLeT commanderhashim ali akramshot deadgaza
ShareTweetSendShare
Previous Post

கமலாலயத்தில் ஆயுத பூஜை!

Next Post

தசரா பண்டிகை! – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies