சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆயுத பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திாி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இநத விழா தொடா்ந்து 9 நாட்கள் நடைபெறும். இதன் நிறைவு நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஆயுத பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மாவிலை, வாழை கன்று கட்டி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை அணிவித்து, பொாி, அவுல், பொாிகடலை, சுண்டல் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபட்டனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பூஜையையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அனைவர் இல்லங்களிலும் செல்வமும் ஆரோக்கியமும் பெருகவும், குழந்தைகள் நல்ல கல்வி வளத்தினைப் பெறவும், தொழில் முனைவோர்கள் நல்ல லாபம் ஈட்டவும் அன்னை சரஸ்வதி தேவி ஆசீர்வதிக்கட்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.