ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
Oct 3, 2025, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

ஆம்னி பேருந்து இன்று வழககம் போல் இயங்கும் என அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை இன்று முடிவடையும் நிலையில், ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்தது. அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க செயலாளர் மாறன் தெரிவித்திருந்தார்.

தங்கள் கூட்டமைப்பின் கீழ் 1,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளதாகவும், மற்ற தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கும் தங்கள் சங்கத்திற்கும் தொடர்பில்லை என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவித்த தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை இணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் அறிவித்ததால் வெளியூர் சென்றிருந்த பயணிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர். சுமார் 10 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ள நிலையில், திடீரென ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என பயணிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதும், இந்த விவகாரத்தை திமுக அரசு கையாண்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: omni bus
ShareTweetSendShare
Previous Post

பாரா ஆசிய விளையாட்டு : தங்க வேட்டையில் இந்தியா !

Next Post

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies