ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
Jul 28, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

ஆம்னி பேருந்து இன்று வழககம் போல் இயங்கும் என அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை இன்று முடிவடையும் நிலையில், ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்தது. அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க செயலாளர் மாறன் தெரிவித்திருந்தார்.

தங்கள் கூட்டமைப்பின் கீழ் 1,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளதாகவும், மற்ற தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கும் தங்கள் சங்கத்திற்கும் தொடர்பில்லை என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவித்த தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை இணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் அறிவித்ததால் வெளியூர் சென்றிருந்த பயணிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர். சுமார் 10 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ள நிலையில், திடீரென ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என பயணிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதும், இந்த விவகாரத்தை திமுக அரசு கையாண்ட விதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: omni bus
ShareTweetSendShare
Previous Post

பாரா ஆசிய விளையாட்டு : தங்க வேட்டையில் இந்தியா !

Next Post

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies