மைசூரு தசரா விழா: குவிந்த சுற்றுலாப் பயணிகள்... ஜொலிக்கும் அரண்மனை!
Sep 29, 2025, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரு தசரா விழா: குவிந்த சுற்றுலாப் பயணிகள்… ஜொலிக்கும் அரண்மனை!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரு தசரா விழாவைக் காண, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கிறார்கள். மேலும், விழாவை முன்னிட்டு மைசூரு அரண்மனை கலர்கலரான மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

நவராத்திரி திருவிழாவும், தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், மைசூரில் நடக்கும் தசரா விழாவைப்போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த விழா, நவராத்திரியின் முதல் நாளன்று தொடங்கி, விஜயதசமி தினம் வரை நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தசரா விழா 413 ஆண்டுகளை நிறைவுசெய்து, 414-வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த தசரா விழாவை முன்னிட்டு, மைசூரு நகரம், அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது. இதற்கிடையே, மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகள் அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி, மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. பின்னர், அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மன்னர் யதுவீர் ராஜ உடையில் வீரநடைபோட்டு தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும், தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கியச் சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும்.

பின்னர், விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு எரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று!

Next Post

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு – ரூ.47.56 கோடி உண்டியல் வசூல்!

Related News

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

மத்தியப் பிரதேசம் : கோயில் திருவிழாவில் சாய்ந்து விழுந்த ராட்டினத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

சீனாவில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான பாலம்!

அமெரிக்கா : தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி – தடுத்து நிறுத்திய போலீசார்!

நாமக்கல்லில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

உலக இருதய தினம் – ஈரோட்டில் “வாக்கத்தான்” போட்டி!

கரூர் துயர சம்பவம் : சிபிஐ விசாரணை கோரி தவெக மனு தாக்கல்!

இந்தியாவில் அதிக நபர்களால் பார்வையிடப்பட்ட சுற்றுலா தலமாகத் தாஜ் மஹால் உள்ளது – மத்திய அரசு

கிருஷ்ணகிரி : மாணவர்களை இறக்கிவிட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து!

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது – ஜெய்சங்கர்

கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

கர்நாடகாவில் நகைக்கடை ஊழியரை கடத்தி ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை!

நெல்லையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies