ஹமாஸின் 400 நிலைகள் அழிப்பு, முக்கியத் தலைவர் "அவுட்": இஸ்ரேல் அறிவிப்பு!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸின் 400 நிலைகள் அழிப்பு, முக்கியத் தலைவர் “அவுட்”: இஸ்ரேல் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், முக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை வீசியதால் இஸ்ரேல் திணறிப்போனது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், 18-வது நாளாக எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஹமாஸ் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய அசுரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400-க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஹமாஸின் தீவிரவாத நிலைகளை அழிப்பதற்காக பரந்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபட்டோம். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மற்றொரு பதிவில், ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசுகின்றனர். கடல் வழியாக ஊடுருவி மசூதிகளில் ஆயுதங்களை பதுக்கி வைக்கிறார்கள். காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் யாஹ்யா சின்வார், முகமது டெய்ஃப், சலே அல்-அரூரி, இஸ்மாயில் ஹனியே ஆகியோரால் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய படுகொலையை நாங்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறுகையில், “இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்று விரும்புகிறது. எனவேதான், கடும் தாக்குதல் நடத்தி ஹமாஸ் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழித்து வருகிறோம். மேலும், அவர்களின் உட்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதோடு, தெற்கில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் விமானப்படை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கியதாகக் கூறியிருக்கிறது. இதில், ஒரு இராணுவ வளாகமும், கண்காணிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், “ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் உள்கட்டமைப்புகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு இராணுவ வளாகம் மற்றும் கண்காணிப்பு நிலையம் ஆகியவை அழிக்கப்பட்டன. அதேபோல, இன்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வடக்குப் படை அணியின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பிரிவுத் தலைவர் இப்ராஹிம் அல் சாஹர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Destroyisrael defence forces400 terrorist targets
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அக்டோபர் 26-ல் ஐ.நா. பொதுசபைக் கூட்டம்!

Next Post

காந்திநகர் பஹுச்சார் மாதா கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies