ஹமாஸின் 400 நிலைகள் அழிப்பு, முக்கியத் தலைவர் "அவுட்": இஸ்ரேல் அறிவிப்பு!
Jul 25, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸின் 400 நிலைகள் அழிப்பு, முக்கியத் தலைவர் “அவுட்”: இஸ்ரேல் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும், முக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை வீசியதால் இஸ்ரேல் திணறிப்போனது. எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், 18-வது நாளாக எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஹமாஸ் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய அசுரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400-க்கும் மேற்பட்ட நிலைகளை தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஹமாஸின் தீவிரவாத நிலைகளை அழிப்பதற்காக பரந்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபட்டோம். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 நிலைகள் அழிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, மற்றொரு பதிவில், ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசுகின்றனர். கடல் வழியாக ஊடுருவி மசூதிகளில் ஆயுதங்களை பதுக்கி வைக்கிறார்கள். காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் யாஹ்யா சின்வார், முகமது டெய்ஃப், சலே அல்-அரூரி, இஸ்மாயில் ஹனியே ஆகியோரால் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய படுகொலையை நாங்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறுகையில், “இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்று விரும்புகிறது. எனவேதான், கடும் தாக்குதல் நடத்தி ஹமாஸ் முக்கியத் தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழித்து வருகிறோம். மேலும், அவர்களின் உட்கட்டமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதோடு, தெற்கில் தரைப்படை நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் விமானப்படை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கியதாகக் கூறியிருக்கிறது. இதில், ஒரு இராணுவ வளாகமும், கண்காணிப்பு நிலையமும் தாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், “ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் உள்கட்டமைப்புகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு இராணுவ வளாகம் மற்றும் கண்காணிப்பு நிலையம் ஆகியவை அழிக்கப்பட்டன. அதேபோல, இன்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் வடக்குப் படை அணியின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பிரிவுத் தலைவர் இப்ராஹிம் அல் சாஹர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Destroyisrael defence forces400 terrorist targets
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அக்டோபர் 26-ல் ஐ.நா. பொதுசபைக் கூட்டம்!

Next Post

காந்திநகர் பஹுச்சார் மாதா கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies