இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், காஸா நகருக்குள் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 5,000-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சூழலில், கடந்த இரு தினங்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் காஸா நகர மக்களின் பலி எண்ணிக்கை 5,750 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும், 17,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஆகவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,000-த்தை தாண்டி இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காஸாவிலுள்ள 24 மருத்துவமனைகளில் 8 மருத்துவமனைகள் முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் முஹமது சக்கூத் தெரிவித்திருக்கிறார். காஸாவின் தெற்குப் பகுதி கான் யூனிஸில், அல் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள நாசரேத் பகுதிதான் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

போர் தொடங்கியது முதல் இதே இடத்தில் நடைபெறும் 3-வது தாக்குதல் இதுவாகும். அதேபோல, காஸாவின் மக்கள் அதிகம் கூடும் பரபரப்பான சந்தையும் தகர்க்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்தோருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை.

மேலும், இறந்தவர்களின் உடல்களை வைக்கவும் போதிய இடமில்லை. இதனால், மருத்துவமனைக்குள்ளேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து உடல்களை வைத்திருக்கிறார்கள். இதுதவிர, இப்போரில் பயன்படுத்தப்படும் குண்டுகளின் வீரியத்தால் தோல்கள் மெழுகுபோல உரிந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, காஸாவின் தெற்குப் பகுதி மீது அசுரத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், வடக்கு பகுதியில் இன்னும் அதிக பலத்தோடு தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. எனவே, வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பு காரணத்திற்காக தெற்கு நோக்கி இடம்பெயருமாறு இஸ்ரேல் மீண்டும் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் காஸாவின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அங்கு வசித்த 2.3 மில்லியன் மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அதேசமயம், காஸா மட்டுமல்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதிகளிலும் இஸ்ரேல் இராணுவத்தின் சோதனையும், கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, எரி பொருள் தீர்ந்து விட்டதால் காஸாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆகவே, காஸாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. அதேபோல், காஸாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

Tags: 700 killedattackIsraelKaza
ShareTweetSendShare
Previous Post

ஜெயிலுக்குள் ஜெயிலர் வில்லன் !

Next Post

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் – வானதி சீனிவாசன் கண்டனம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies