ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!
Sep 6, 2025, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், காரணங்கள் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்பதோடு, பதவி விலகவும் வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைகாரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. மேலும், பீரங்கி, டாங்கிகள் மூலமும், காலாட்படை மூலமும் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட சுமார் 6,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 17,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்று 19-வது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில், “ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்துக் கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்” என்றார். அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சர் கோஹன் கூறியிருக்கிறார்.

Tags: IsraelUnited NationGeneral secretary
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்களை கையாடல் செய்வதிலேயே திமுக குறியாக இருக்கிறது! – அண்ணாமலை.

Next Post

பாரா ஆசியா விளையாட்டு இந்தியாவின் பதக்கங்கள்!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies