ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், காரணங்கள் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்பதோடு, பதவி விலகவும் வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைகாரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. மேலும், பீரங்கி, டாங்கிகள் மூலமும், காலாட்படை மூலமும் அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட சுமார் 6,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 17,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்று 19-வது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, “இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது.

10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணம் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது” என்று கூறியிருக்கிறார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில், “ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்துக் கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்” என்றார். அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சர் கோஹன் கூறியிருக்கிறார்.

Tags: IsraelUnited NationGeneral secretary
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்களை கையாடல் செய்வதிலேயே திமுக குறியாக இருக்கிறது! – அண்ணாமலை.

Next Post

பாரா ஆசியா விளையாட்டு இந்தியாவின் பதக்கங்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies