இந்த முறை மிஸ்ஸே ஆகாது - சூரியகுமார் யாதவ் !
Sep 6, 2025, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்த முறை மிஸ்ஸே ஆகாது – சூரியகுமார் யாதவ் !

Web Desk by Web Desk
Oct 25, 2023, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியகுமார் யதாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த ரோஹித் சர்மா.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி தனது அடுத்த போட்டியை இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் காயத்தில் உள்ள இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு இன்னும் காயம் குணமாகாத காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டி முன்பாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் கடந்த போட்டியில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவர் என்று இரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சேஸிங்கின் போது பேட்டிங் ஆட வந்தார். ஆனால், 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஓடி வருவதை பார்க்காமல் பந்தை பார்த்துக் கொண்டு இருந்ததால், அவர் ரன் அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே, வாய்ப்பே இல்லாமல் இந்திய அணியில் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்த சூர்யகுமார் யாதவ் தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவார் என்ற தகவல்கள் முதலில் வெளியானது. அதனால், இனி சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என கருதப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள செய்தியின் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா காயம் குணமடைந்தாலும் அவரால் முழு வீச்சில் பந்து வீச முடியுமா என சந்தேகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் சிறிது காலம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அவருக்கு மீண்டும் ஏற்கனவே காயம் இருந்த இடத்தில் வலி ஏற்படாமல் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு பாண்டியவிற்கு மீண்டும் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.

அதனால், பாண்டியாவிற்கு பதில் சூர்யகுமார் யாதவ்வை அணியில் ஆட வைக்க கேப்டன் ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: rohith sharmaindian cricket playericc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 29-ஆம் தேதி: 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

புதுவிதமாக உருட்டிய இங்கிலாந்து வீரர் !

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies