புதுவிதமாக உருட்டிய இங்கிலாந்து வீரர் !
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுவிதமாக உருட்டிய இங்கிலாந்து வீரர் !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

” எங்கள் தோல்விக்கு காற்று தான் காரணம் ” என்று சின்னப்பிள்ளை தனமாக காரணம் கூறும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

பலம் குன்றிய ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டு தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, அதன் பிறகு மும்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தாங்கள் மோசமாக விளையாடுவதற்கு காரணம் இந்தியாவின் சுற்றுச்சூழல் தான் என்பது போல் ஜோ ரூட் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “என் வாழ்நாளில் இதுபோல் உள்ள ஒரு சூழலில் இதற்கு முன்பு நான் விளையாடியதே கிடையாது ஆகையால் களத்தில் நின்று விளையாடும் போது மூச்சு திணறுகிறது. சில சமயம் நமது மூச்சை நாமே சுவாசிப்பது போல் இருக்கிறது.

இது போல் சூழல் நான் இதுவரை கண்டதே இல்லை. நாங்கள் மட்டும் அல்ல தென்னாப்பிரிக்க வீரர் கிளாசென் கூட பேட்டிங் செய்து விட்டு அந்த ஆட்டத்தில் பில்டிங்கிற்கு வரவே இல்லை. காரணம் இது போன்ற ஒரு சூழலில் விளையாடிவிட்டு அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.

நாங்கள் களத்திற்கு வந்தாலே எங்களுடைய ஜெர்சி எல்லாம் வியர்வையில் முற்றிலும் நினைந்து விடுகிறது. வழக்கத்தை விட அதிக அளவில் மூச்சு வாங்குவதாக நான் நினைக்கிறேன். நமது உடல் தகுதி நல்ல நிலையில் இருக்கிறது என்று நமக்கு தெரியும். அதற்காக கடும் முயற்சிகளை எல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இங்கு விளையாடியப் போது எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரசீத் பில்டிங் செய்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று மிகவும் கஷ்டப்பட்டார். எங்களால் சரியாக விளையாட முடியாத காரணத்திற்கு காற்றின் தரம் ஒரு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை.

காற்றின் தரம் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. ஆனால் நாங்கள் மும்பையில் விளையாடும் போது மிகவும் கடினமான சூழலை கண்டோம். மேலும் மைதானத்தில் ஒரு புறத்திலிருந்து பார்க்கும் போது எதிர்புறம் வெயில் சுளிர் என்று அடித்தது. பந்தை பார்க்க கூட முடியவில்லை. காற்றின் தரத்தில் பிரச்சனையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற அனுபவத்தை கண்டதே இல்லை ” என்று ஜோ ரூட் கூறியிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் இந்தியாவின் காற்றில் தரம் குறித்து அவர்கள் குற்றச்சாட்டு இருப்பது இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Tags: england cricket
Share
Tweet
SendShare
Previous Post

இந்த முறை மிஸ்ஸே ஆகாது – சூரியகுமார் யாதவ் !

Next Post

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட முதியவர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies