ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Jan 14, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 37 மாணவர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, இச்சம்பவத்தில் சட்டவிரோதமாக ஏராளமான பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலைக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹாட்லா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவிந்த் சிங்குக்குச் சொந்தமான சிகார் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வளாகங்கள், மஹுவா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவ்வழக்கில் முன்னாள் ஆர்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாபுலால் கட்டாரா, அனில் குமார் மீனா ஆகியோர் அமலாக்கத்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் கோதானியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, 12 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனைகள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags: Rajasthanenforcement raidcongress presidentgovind house
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Next Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies