ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 37 மாணவர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, இச்சம்பவத்தில் சட்டவிரோதமாக ஏராளமான பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலைக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹாட்லா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவிந்த் சிங்குக்குச் சொந்தமான சிகார் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வளாகங்கள், மஹுவா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவ்வழக்கில் முன்னாள் ஆர்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாபுலால் கட்டாரா, அனில் குமார் மீனா ஆகியோர் அமலாக்கத்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் கோதானியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, 12 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனைகள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags: Rajasthanenforcement raidcongress presidentgovind house
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Next Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies