ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Jul 28, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்தது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 37 மாணவர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, இச்சம்பவத்தில் சட்டவிரோதமாக ஏராளமான பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலைக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா மற்றும் மஹுவா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹாட்லா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவிந்த் சிங்குக்குச் சொந்தமான சிகார் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வளாகங்கள், மஹுவா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவ்வழக்கில் முன்னாள் ஆர்.பி.எஸ்.சி. உறுப்பினர் பாபுலால் கட்டாரா, அனில் குமார் மீனா ஆகியோர் அமலாக்கத்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் கோதானியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, 12 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுபோன்ற சோதனைகள் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Tags: Rajasthanenforcement raidcongress presidentgovind house
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

Next Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies