வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!
Aug 19, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட 1.30 கோடி ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஹவாலா பணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அது ஒரு எலெக்ட்ரானிக் கடைக்குச் சொந்தமான லோடு ஆட்டோ. அந்த ஆட்டோவில் சீல் உடைக்கப்படாத 6 வாஷிங் மெஷின்கள் மட்டுமே இருந்தது. எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநர் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வார்களா என்கிற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மெஷின்களையும் கீழே இறக்கிய காவல்துறையின், அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, வாஷிங் மெஷினுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 1.30 கோடி ரூபாய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆட்டோவையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தசரா பண்டிகையை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வகையில் கிடைத்த பணம் என்றும், வங்கியில் செலுத்துவதற்காக விஜயவாடா கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும், பணத்திற்குண்டான போதிய ஆதாரம் இல்லாததால் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது ஹவாலா பணமா அல்லது தெலங்கானா மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் செலவுக்காகவோ அல்லது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: AndraWashing mechine1.30 crores
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Next Post

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் மத்திய நிர்வாக குழுக்கூட்டம்!

Related News

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies