வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட 1.30 கோடி ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஹவாலா பணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அது ஒரு எலெக்ட்ரானிக் கடைக்குச் சொந்தமான லோடு ஆட்டோ. அந்த ஆட்டோவில் சீல் உடைக்கப்படாத 6 வாஷிங் மெஷின்கள் மட்டுமே இருந்தது. எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநர் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வார்களா என்கிற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மெஷின்களையும் கீழே இறக்கிய காவல்துறையின், அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, வாஷிங் மெஷினுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 1.30 கோடி ரூபாய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆட்டோவையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தசரா பண்டிகையை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வகையில் கிடைத்த பணம் என்றும், வங்கியில் செலுத்துவதற்காக விஜயவாடா கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும், பணத்திற்குண்டான போதிய ஆதாரம் இல்லாததால் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது ஹவாலா பணமா அல்லது தெலங்கானா மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் செலவுக்காகவோ அல்லது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: AndraWashing mechine1.30 crores
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Next Post

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் மத்திய நிர்வாக குழுக்கூட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies