வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!
Jun 13, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட 1.30 கோடி ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஹவாலா பணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அது ஒரு எலெக்ட்ரானிக் கடைக்குச் சொந்தமான லோடு ஆட்டோ. அந்த ஆட்டோவில் சீல் உடைக்கப்படாத 6 வாஷிங் மெஷின்கள் மட்டுமே இருந்தது. எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநர் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வார்களா என்கிற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மெஷின்களையும் கீழே இறக்கிய காவல்துறையின், அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, வாஷிங் மெஷினுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 1.30 கோடி ரூபாய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆட்டோவையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தசரா பண்டிகையை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வகையில் கிடைத்த பணம் என்றும், வங்கியில் செலுத்துவதற்காக விஜயவாடா கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும், பணத்திற்குண்டான போதிய ஆதாரம் இல்லாததால் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது ஹவாலா பணமா அல்லது தெலங்கானா மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் செலவுக்காகவோ அல்லது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: AndraWashing mechine1.30 crores
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Next Post

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் மத்திய நிர்வாக குழுக்கூட்டம்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies