வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஷிங் மெஷினுக்குள் வைத்து ரூ.1.30 கோடி கடத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் வாஷிங் மெஷினுக்குள் வைத்து கடத்தப்பட்ட 1.30 கோடி ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஹவாலா பணமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் பணம் கடத்திச் செல்லப்படுவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அது ஒரு எலெக்ட்ரானிக் கடைக்குச் சொந்தமான லோடு ஆட்டோ. அந்த ஆட்டோவில் சீல் உடைக்கப்படாத 6 வாஷிங் மெஷின்கள் மட்டுமே இருந்தது. எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு, அந்த ஆட்டோ ஓட்டுநர் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் வாஷிங் மெஷின்களை ஏற்றிச் செல்வார்களா என்கிற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மெஷின்களையும் கீழே இறக்கிய காவல்துறையின், அவற்றை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, வாஷிங் மெஷினுக்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 1.30 கோடி ரூபாய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ஆட்டோவையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு, தசரா பண்டிகையை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வகையில் கிடைத்த பணம் என்றும், வங்கியில் செலுத்துவதற்காக விஜயவாடா கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். எனினும், பணத்திற்குண்டான போதிய ஆதாரம் இல்லாததால் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது ஹவாலா பணமா அல்லது தெலங்கானா மாநிலத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் செலவுக்காகவோ அல்லது மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவோ கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: AndraWashing mechine1.30 crores
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டேங்கர் லாரி மீது கார் மோதல்: ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் பரிதாப பலி!

Next Post

குஜராத்தில் ஆர்எஸ்எஸ் மத்திய நிர்வாக குழுக்கூட்டம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies