மேம்பாலத்தில் பறந்த பாலஸ்தீனக் கொடி: கோவையில் பரபரப்பு!
Sep 6, 2025, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேம்பாலத்தில் பறந்த பாலஸ்தீனக் கொடி: கோவையில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் போர் நடந்து வரும் நிலையில், கோவை உக்கடம் மேம்பாலத்தில் பாலஸ்தீனக் கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், வெளிநாட்டினர் மற்றும் இஸ்ரேலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.

இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,000-த்தைத் தாண்டி இருக்கிறது. 20-வது நாளாக இன்றும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்காமல் விடமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார்.

இப்போரில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேசமயம், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனிடையே, இப்போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24-ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் அனைத்து ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், போராட்டத்தின்போது போராட்டம் நடந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது சிலர் பாலஸ்தீனக் கொடியை கட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, உக்கடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகியோர் பாலஸ்தீன கொடியை கட்டியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, உக்கடம் காவல்துறையினர் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

Tags: kovaiPalasteneFlag
ShareTweetSendShare
Previous Post

ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

Next Post

உலக கிரிக்கெட் போட்டியில்156 ரன்கள் எடுத்த இங்கிலாந்து!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies