தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !
Jan 14, 2026, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை, வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பட்லர்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் நிசாங்கா 77 ரன்களையும், சமரவிக்ரமா 65 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது, ஒரு கேப்டனாக ஏராளமான உணர்வுகள் ஏற்படுகிறது. முதலில் எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை. வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஒருநாள் இரவில் எப்படி ஒரு அணியால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைக்கும் போது தான் விரக்தியாக உள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” இந்த உலகக்கோப்பையில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதற்கென காரணங்களும் இல்லை. யாரையும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாது. இந்த அணியில் பிளேயிங் லெவனும் பிரச்சனையில்லை. இன்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் ரன் அவுட் உள்ளிட்ட விக்கெட்டுகளை கொடுத்தோம். நாங்கள் இதுபோன்ற சாதாரண தவறுகளை செய்யக் கூடிய அணியல்ல.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அடிப்படையை கூட எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல் தற்பெருமையும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. எங்களுக்கான தரத்தை நாங்கள் தவறவிட்டுள்ளோம். அடுத்தடுத்து ஆடவுள்ள போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

பட்லர் பேசும் போது அவரது குரல் எந்தவித உற்சாகமும் இன்றி தழுதழுத்த நிலையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags: england cricket
ShareTweetSendShare
Previous Post

4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!

Next Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies