தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை, வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பட்லர்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் நிசாங்கா 77 ரன்களையும், சமரவிக்ரமா 65 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது, ஒரு கேப்டனாக ஏராளமான உணர்வுகள் ஏற்படுகிறது. முதலில் எனது ஆட்டமும் சிறப்பாக இல்லை. வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஒருநாள் இரவில் எப்படி ஒரு அணியால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை நினைக்கும் போது தான் விரக்தியாக உள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” இந்த உலகக்கோப்பையில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதற்கென காரணங்களும் இல்லை. யாரையும் கை நீட்டி குற்றம் சொல்ல முடியாது. இந்த அணியில் பிளேயிங் லெவனும் பிரச்சனையில்லை. இன்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் ரன் அவுட் உள்ளிட்ட விக்கெட்டுகளை கொடுத்தோம். நாங்கள் இதுபோன்ற சாதாரண தவறுகளை செய்யக் கூடிய அணியல்ல.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அடிப்படையை கூட எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல் தற்பெருமையும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. எங்களுக்கான தரத்தை நாங்கள் தவறவிட்டுள்ளோம். அடுத்தடுத்து ஆடவுள்ள போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

பட்லர் பேசும் போது அவரது குரல் எந்தவித உற்சாகமும் இன்றி தழுதழுத்த நிலையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags: england cricket
ShareTweetSendShare
Previous Post

4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!

Next Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies