4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!
Jul 27, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்திற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட சுமார் 4.7 கிலோ தங்கக் கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்படும் கடத்தல் தங்கக் கட்டிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவிகளுடன், எந்த சோதனையும் இல்லாமல், வெளியில் கொண்டு சென்று கடத்தல் ஆசாமிகளிடம் ஒப்படைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், துபாயிலிருந்து ஒரு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சட்ட விரோதமாக வெளியில் எடுத்துச் செல்வதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளைப் போல் நடித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில், துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக உள்ள சீனிவாசன் என்பவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவருடைய உள்ளாடைக்குள், ஒரு கிலோ தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சீனிவாசனின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ததில், சுமார் 3.7 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விமான நிலையத்தில் ஏற்கனவே ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தினகரன், என்பவருக்கும், இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வசித்து வரும் தினகரனையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவரிடம் இருந்தும், 2.70 கோடி ரூபாய் மதிப்புடைய, 4.7 கிலோ தங்கக் கட்டிகளைப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த தங்கக் கட்டிகள் அனைத்தும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் என்று தெரிய வந்தது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags: chennai airport4.7 kg gold bars seizedairport employee arrested!
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டனில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் !

Next Post

தோல்விக்கு விளக்கம் அளித்த இங்கிலாந்து கேப்டன் !

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies