தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். இதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் அப்துல்லா ஷபீக் 4 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து 6 வது ஓவரில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 38/2 ஆக இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

அப்போது 15 வது ஓவரில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 27 பந்துகளுக்கு 31 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். பாபர் ஆசாம் மற்றும் இப்திகார் அகமது நிதானமாக 10 ஓவர்கள் வரை விளையாடிவந்தனர்.

இதில் இப்திகார் அகமது 25 வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஓர் பௌண்டரி என மொத்தமாக 31 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுக்கு 65 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து சவுத் ஷகீல் மற்றும் ஷதாப் கான் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஷதாப் கான் 39 வது ஓவரில் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 42 வது ஓவரில் சவுத் ஷகீல் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய நவாஸ் 1 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 24 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்களையும் லுங்கி என்கிடி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 271 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cuppakistan vs south africa
ShareTweetSendShare
Previous Post

ராகுல்காந்தியை பிரதமராக்க நினைக்கும் சோனியா – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

பிரதமர் மோடியின் 10 உறுதியான உறுதி மொழிகள் – வானதி சீனிவாசன் புகழாரம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies