தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !
Aug 21, 2025, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !

Web Desk by Web Desk
Oct 27, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். இதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் அப்துல்லா ஷபீக் 4 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து 6 வது ஓவரில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 38/2 ஆக இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

அப்போது 15 வது ஓவரில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 27 பந்துகளுக்கு 31 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். பாபர் ஆசாம் மற்றும் இப்திகார் அகமது நிதானமாக 10 ஓவர்கள் வரை விளையாடிவந்தனர்.

இதில் இப்திகார் அகமது 25 வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஓர் பௌண்டரி என மொத்தமாக 31 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுக்கு 65 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து சவுத் ஷகீல் மற்றும் ஷதாப் கான் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஷதாப் கான் 39 வது ஓவரில் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 42 வது ஓவரில் சவுத் ஷகீல் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய நவாஸ் 1 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 24 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்களையும் லுங்கி என்கிடி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 271 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cuppakistan vs south africa
ShareTweetSendShare
Previous Post

ராகுல்காந்தியை பிரதமராக்க நினைக்கும் சோனியா – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

பிரதமர் மோடியின் 10 உறுதியான உறுதி மொழிகள் – வானதி சீனிவாசன் புகழாரம்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies