இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!
Jan 14, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் தொடங்கியதில் இருந்தே, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீதும், அதன் ஆதரவு படைகள் மீதும் குறைந்தது 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் மீதும் சுமார் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 17-ம் தேதியும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்கப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் நடத்தப்படும் இத்தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தாக்குதல் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா, தற்போது மேலும் 900 அமெரிக்க இராணுவ வீரர்களையும் அனுப்பி இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: americaattack2 locationsEast Syria
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங்!

Next Post

தமிழகம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies