இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!
Oct 4, 2025, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

Web Desk by Web Desk
Oct 28, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் தொடங்கியதில் இருந்தே, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீதும், அதன் ஆதரவு படைகள் மீதும் குறைந்தது 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் மீதும் சுமார் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 17-ம் தேதியும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்கப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் நடத்தப்படும் இத்தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தாக்குதல் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா, தற்போது மேலும் 900 அமெரிக்க இராணுவ வீரர்களையும் அனுப்பி இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: americaattack2 locationsEast Syria
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங்!

Next Post

தமிழகம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies