இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் தொடங்கியதில் இருந்தே, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீதும், அதன் ஆதரவு படைகள் மீதும் குறைந்தது 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் மீதும் சுமார் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 17-ம் தேதியும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்கப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் நடத்தப்படும் இத்தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தாக்குதல் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா, தற்போது மேலும் 900 அமெரிக்க இராணுவ வீரர்களையும் அனுப்பி இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: americaattack2 locationsEast Syria
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங்!

Next Post

தமிழகம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies