இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!
Jul 29, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் சிரியா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-காஸா போருக்கு மத்தியில், கிழக்கு சிரியாவில் ஈரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஆயுத சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் தொடங்கியதில் இருந்தே, ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீதும், அதன் ஆதரவு படைகள் மீதும் குறைந்தது 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சிரியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் மீதும் சுமார் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 17-ம் தேதியும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்புடைய 2 இடங்கள் மீது அமெரிக்கப் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவும், தற்காப்புக்காகவும் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் நடத்தப்படும் இத்தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், தாக்குதல் தொடர்ந்தால், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மத்திய கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு தனது போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா, தற்போது மேலும் 900 அமெரிக்க இராணுவ வீரர்களையும் அனுப்பி இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: americaattack2 locationsEast Syria
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து பேட்டிங்!

Next Post

தமிழகம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies