இனி முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினர். அறிவிக்கப்படாத இத்தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது. மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வான், கடல், தரை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகளி, ஏராளமான இஸ்ரேலியர்களை ஈவு இரக்கமின்றி சுட்டும், தலையை வெட்டியும் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் 23-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த 22 நாட்களில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்திருக்கிறது. மேலும், தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட 600-க்கும் மேற்பட்ட நிலைகளையும் அழித்திருக்கிறது.

அதேசமயம், இத்தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் 8,000 பேர் கொல்லப்பட்டிருப்பதுதான் சோகம். எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம் என்றும், மக்கள் வசிப்பிடங்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் முகாம்களை அமைத்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்திருக்கிறது. கடந்த சில தினங்களாக இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், தற்போது முப்படைத் தாக்குதலில் ஈடுபடப்போவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில், “அக்டோபர் 7-ம் தேதி மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றத்தை ஹமாஸ் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இஸ்ரேல் போரை தொடங்கவில்லை. நாங்களாக போரைத் தேடிச் செல்லவில்லை. ஹமாஸ் இஸ்ரேல் மீதும் நாட்டு மக்கள் மீதும் அறிவிக்கப்படாத தாக்குதலை நடத்தியது. இவை இரண்டுமே போர்க் குற்றங்கள்.

மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை புதிய கட்டத்தை நோக்கி நகர்த்தவிருக்கிறோம். காஸாவில் தரை, கடல் மற்றும் வான்வழித் தாக்குதலை நடத்தப் போகிறோம். ஆகவே, காஸாவின் தெற்குப் பகுதியை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். எங்களது போர் காஸா நகர மக்களுக்கு எதிரானது அல்ல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரானது.

ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் மக்களோடு மக்களாக ஒளிந்துகொண்டு, மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவேதான், தீவிரவாதிகளையும், பொதுமக்களையும் வேறுபடுத்தும் வகையில், ஹமாஸ் கோட்டையிலிருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேறும்படி பல்வேறு தகவல் தொடர்பு வழிகள் மூலம் எச்சரித்து வருகிறோம். மேலும், காஸாவின் தெற்கு பகுதியில்தான் தண்ணீர், உணவு, மருந்துப் பொருட்கள் என வெளிநாடுகளில் இருந்து வரும் மனிதாபிமான உதவிகளும் கிடைக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே. நேற்று காஸா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ வீரர்கள், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இஸ்ரேல் கொடியை ஏற்றி இருக்கின்றனர். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பேசும் நபர், “கொடூரமான குற்றத்திற்கு 3 வாரங்களுக்குப் பிறகு, 401-வது படைப்பிரிவின் 52-வது பட்டாலியனின் வீரர்கள் காஸா நகரின் மையப் பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கொடியை ஏற்றி இருக்கிறார்கள். நாங்கள் மறக்க மாட்டோம். வெற்றி வரும் வரை நிறுத்த மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்துவரும் தரைப்படைத் தாக்குதலின் மூலம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான இரண்டாம் கட்டப் போர் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார். மேலும், “கொலைகார எதிரியை தோற்கடித்து, நமது நாட்டில் நமது இருப்பை உறுதி செய்வதே இஸ்ரேலின் குறிக்கோள். அதை இரண்டாம் சுதந்திரப் போர் என்று இஸ்ரேல் என்று அழைக்கிறது.

இப்போர் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கலாம். ஆனாலும், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எதற்கும் தயாராக இருக்கிறோம். தாயகத்தைக் காக்க இஸ்ரேல் போராடும். எதிரிகளை தரைக்கு மேலேயும் தாக்குவோம், தரைக்கு உள்ளேயும் தாக்குவோம். இருளுக்கு மேல் ஒளி, மரணத்தின் மீது வாழ்க்கை. இதுதான் எங்களது வாழ்க்கையின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து அபார வெற்றி !

Next Post

எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை.

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies