அமைச்சர் அலுவலகம் முற்றுகை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்
Sep 6, 2025, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

Web Desk by Web Desk
Oct 30, 2023, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதைக் கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டி தேர்வு, வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, பணி நியமனத்துக்குக் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறியதாவது, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு தரப்பினருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 20 ஆயிரம் பேருக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், இன்னும் பணி வழங்கப்படவில்லை. தேர்தலின் போது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, உறுதி அளித்தனர். ஆனால், தற்போது பணி நியமனத்துக்கு, போட்டித் தேர்வு நடத்தப் போவதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் வாயிலாக, 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுவர். அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் நியமனத் தேர்வை இரத்து செய்வோம் என, தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார். தற்போது, நியமன தேர்வு நடத்தப்படும் என, அரசாணை வெளியாகி உள்ளது என்று கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், அமைச்சர் அலுவலக தரப்பினரும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற 31-ஆம் தேதி சென்னையில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: protestteachersteachersprotest
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா இரயில் விபத்து – குடியரசு தலைவர் இரங்கல்

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இஸ்ரேல்

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies