பாகிஸ்தானில் இந்து மத வெறுப்பு பிரச்சாரகர் மகன் சுட்டுக்கொலை!
Mar 15, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் இந்து மத வெறுப்பு பிரச்சாரகர் மகன் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் இந்து மதத்துக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரச்சாரகர் தாரீக் ஜமீலின் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அதேபோல, இந்து மதத்துக்கு விரோதமான நாடாகவும் இருந்து வருகிறது. இந்நாட்டில் இந்துக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்துக்களை தாக்குவது, இந்துக் கோவில்களை தகர்ப்பது, இந்துப் பெண்களை கடத்திச் சென்று, கட்டாய மத மாற்றம் செய்து, திருமணம் செய்து கொள்வது என்று பாகிஸ்தானில் நடக்கும் அத்துமீறல்கள் சொல்லி மாளாது.

இது ஒரு புறம் இருக்க, இந்து மத வெறுப்புப் பிரச்சாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி இந்து மதத்துக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வதில் முதன்மையானவர் மௌலானா தாரீக் ஜமீல். இவரது மகன் அஸீம் ஜமீல்தான் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானின் கானேவால் மாவட்டம் துலம்பா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மகன் உயிரிழந்ததை தாரீக் ஜமீலும் உறுதி செய்திருக்கிறார்.

இது குறித்து தாரீக் ஜமீல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகன் எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டார். அவருக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இது தொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி மியான் சனுன் சலீம் கூறுகையில், “மௌலானா அஸீம் ஜமீல் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார்” என்று தெரிவித்தார்.

எனினும், இது தற்கொலையா? அல்லது மோதல் சம்பவத்தில் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் பாகிஸ்தான் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அஸீம் ஜமீல் மரணத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி 172 பேரை கொலை செய்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரரன் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில்தான் பதுங்கி இருக்கிறான். இவனது மகன் கமாலுதீன் சயீத் சமீபத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistananti hindu agitationMaulanaAsim jamilShoot dead
ShareTweetSendShare
Previous Post

கேரள குண்டு வெடிப்பு: யார் இந்த யெகோவாவின் சாட்சிகள் பிரிவினர்?

Next Post

உலகமே விவாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies