ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!
Jul 26, 2025, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் தலைவிரித்தாடிய தீவிரவாதம், கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகிறது. எனினும், புதிது புதிதாக தீவிரவாதிகள் முளைத்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்தும், ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தும்சி நவ்போரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த வாலிபர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த வாலிபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பதும், கூலித் தொழிலாளியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டையில், குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஈத்கா அருகே தீவிரவாதிகளால் காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Tags: U.P. labourjammu kashmirShoot dead
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4,000 கன அடியாக குறைந்தது!

Next Post

உலகக்கோப்பை பட்டியல்

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies