ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!
Oct 29, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் தலைவிரித்தாடிய தீவிரவாதம், கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகிறது. எனினும், புதிது புதிதாக தீவிரவாதிகள் முளைத்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்தும், ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தும்சி நவ்போரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த வாலிபர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த வாலிபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பதும், கூலித் தொழிலாளியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டையில், குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஈத்கா அருகே தீவிரவாதிகளால் காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Tags: Shoot deadU.P. labourjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4,000 கன அடியாக குறைந்தது!

Next Post

உலகக்கோப்பை பட்டியல்

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies