ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!
Jul 30, 2026, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் தலைவிரித்தாடிய தீவிரவாதம், கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகிறது. எனினும், புதிது புதிதாக தீவிரவாதிகள் முளைத்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்தும், ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தும்சி நவ்போரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த வாலிபர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த வாலிபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பதும், கூலித் தொழிலாளியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டையில், குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஈத்கா அருகே தீவிரவாதிகளால் காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Tags: jammu kashmirShoot deadU.P. labour
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4,000 கன அடியாக குறைந்தது!

Next Post

உலகக்கோப்பை பட்டியல்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies