ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!
Apr 29, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் தலைவிரித்தாடிய தீவிரவாதம், கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகிறது. எனினும், புதிது புதிதாக தீவிரவாதிகள் முளைத்து வருகிறார்கள். மேலும், பாகிஸ்தான் எல்லையிலிருந்தும், ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் தும்சி நவ்போரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த வாலிபர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த வாலிபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பதும், கூலித் தொழிலாளியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) வழியாக ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியை இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டையில், குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரின் ஜுமாகுண்ட் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஈத்கா அருகே தீவிரவாதிகளால் காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Tags: jammu kashmirShoot deadU.P. labour
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4,000 கன அடியாக குறைந்தது!

Next Post

உலகக்கோப்பை பட்டியல்

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies