அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்... டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி விவகாரத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வாகன எண் ஜே.சி.பி. இயந்திரத்தினுடையது இல்லை என்பதும், அது ஒரு டி.வி.எஸ். நிறுவனத்தின் சூப்பர் எக்ஸ்எல் வாகனத்தின் பதிவு எண் என்பதும் தெரியவந்திருக்கிறது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்புறம் இருந்த கொடிக்கம்பத்தை கடந்த 21-ம் தேதி காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றினர். இதற்கு, பா.ஜ.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில்தான், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் சேதப்படுத்திய ஜே.சி.பி. வாகனத்தின் பதிவு எண் என்று சொல்லி, சென்னை மாநகராட்சித் தரப்பில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதிவு எண் டி.வி.எஸ். நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தின் பதிவு எண் என்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அமர் பிரசாத் ரெட்டியின் வழக்கறிஞர் பால்கனகராஜ் கூறுகையில், “கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில், அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்திருக்கும் போலீஸார், அவர் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். கோட்டூர்புரம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, கானாத்தூர் போலீஸார் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்திருப்பதற்கு முக்கியக் காரணமே, ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்தியதாகத்தான். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சித் தரப்பில் அந்த வாகனத்தின் பதிவு எண் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வாகன எண்ணை ஆராய்ந்து பார்த்தால் அது ஒரு டி.வி.எஸ். வாகனத்தினருடையது.

அதேபோல, அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாயப்போவதாக தகவல் கசிகிறது. ஆனால், இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். இதனிடையே, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்திருக்கிறது” என்றார்.

Tags: Amar PrasathJCBVehile numberWrong
ShareTweetSendShare
Previous Post

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Next Post

கை இல்லாமல் 3 பதக்கங்களை வென்ற ஷீத்தல் தேவி : யார் இவர் ?

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies