கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!
Jul 31, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில், யெகோவாவின் சாட்சிகள் சபை எனும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 27-ம் தேதி முதல் மாநாடு நடத்தி வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் மற்றொரு பெண்ணும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனினும், இது தீவிரவாத சதியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கேரள குண்டு வெடிப்புக்கு ஹமாஸ் ஆதரவுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருந்தார். காரணம், இச்சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கேரளாவில் பேரணி நடந்தது. இப்பேரணியில் ஹமாஸ் மாஜி தலைவர் மஷால் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags: KeralaCentral MinisterRajiv Chandrasekar
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Next Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies