கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!
Apr 29, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில், யெகோவாவின் சாட்சிகள் சபை எனும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 27-ம் தேதி முதல் மாநாடு நடத்தி வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் மற்றொரு பெண்ணும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனினும், இது தீவிரவாத சதியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கேரள குண்டு வெடிப்புக்கு ஹமாஸ் ஆதரவுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருந்தார். காரணம், இச்சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கேரளாவில் பேரணி நடந்தது. இப்பேரணியில் ஹமாஸ் மாஜி தலைவர் மஷால் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags: KeralaCentral MinisterRajiv Chandrasekar
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Next Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies