கை இல்லாமல் 3 பதக்கங்களை வென்ற ஷீத்தல் தேவி : யார் இவர் ?
Jul 31, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கை இல்லாமல் 3 பதக்கங்களை வென்ற ஷீத்தல் தேவி : யார் இவர் ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி யார் ?

பிறந்தத்திலிருந்தே 2 கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையோடுப் போராடி பதக்கங்களை வென்ற இந்த வீராங்கனையை பற்றி பார்ப்போம்.

ஜம்மு , காஷ்மீரின் கிஷ்த்வாரில் உள்ள லோய்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீத்தல் தேவி. இவர் கைகள் இல்லையே என்று கவலைப்படுவதை விட கால்கள் இருக்கிறதே என்று நினைத்து சந்தோஷப்படுவதுடன் அதை வைத்து சாதிக்கலாம் எனவும் முடிவும் செய்தார். இவரது எண்ணத்திற்கு பெற்றோர்களும்,நண்பர்களும்,கிராம மக்களும் உறுதுணையாக இருந்தனர்.

விளையாட்டுத்தான் தன்னை உயர்த்தும் என்று முடிவெடுத்து கட்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி ஆலய விளையாட்டு வாரியத்தில் சேர்ந்தார்.

அங்கு தன்னை வில்வித்தை போட்டிக்கு தயார் செய்யும்படி கூறியுள்ளார்,வில்வித்தை என்பது திறமை, துல்லியம், பார்வை, செறிவு மற்றும் நல்ல கட்டுப்பாடு தேவைப்படும் ஒரு விளையாட்டு ஆகவே பயிற்சியாளர்கள் இரு கைகளும் இல்லாத ஒருவருக்கு எப்படி வில்வித்தையில் பயிற்சிதருவது என்பது தெரியாமல் குழம்பிப்போயினர்.

அதற்கு ஷீத்தல் தேவியே சில வெளிநாட்டு ஊனமுற்ற வில்வித்தை வீரர்களின் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்து தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இவரது உறுதியைப் பார்த்து பயிற்சியாளர்களும் இறங்கிவந்து பயிற்சி தந்தனர்,ஆரம்பத்தில் இவரால் கால்களால் வில்லை துாக்கவே முடியாமல் இருந்தது, வேறு விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்கிறாயா எனக்கேட்ட போது இல்லையில்லை வில்வித்தைதான் என் தேர்வு என்று மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்து அதில் தேர்வு பெற்றார்.
ஒரு நாளைக்கு ஐம்பது அம்புகளை குறிபார்த்து எய்து பயிற்சி பெற்றாலே வீரர்கள் சோர்வடைந்து விடுவர் ஆனால் தேவியோ முன்னுாறு அம்புகள் எய்துவிட்டும் சோர்வடையாமல் நிலைத்து நின்றார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, தேவி சோனிபட்டில் நடந்த பாரா ஓபன் நேஷனல்ஸில் வெள்ளி வென்றார் மற்றும் ஓபன் நேஷனல்ஸில் திறமையான வில்வீரர்களுக்கு எதிராகப் போட்டியிடும் போது நான்காவது இடத்தைப் பிடித்தார்.

அதன்பிறகு வெற்றியை நோக்கியே பயணிக்க ஆரம்பித்தவர் இன்று உடல் ஊனமுற்றவர்கள் பெறும் உயர்ந்த விருதான பாரா ஒலிம்பிக் விருதினை பெற்றுள்ளார்.

தனக்கு கை இல்லையென்றாலும் தன்னம்பிக்கையை தன்னுடைய நம்பகமான கையாக கொண்டு விளையாட்டில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்ற வீராங்கனையை வாழ்த்துவோம்.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Next Post

ஒகேனக்கல்: காட்டு யானை சுட்டுக்கொலை – வேட்டை கும்பல் அட்டூழியம்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies