சாதனைகளின் புதிய உச்சத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!
Jul 25, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனைகளின் புதிய உச்சத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், குஜராத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இன்று என் கண்முன்பு சிறிய இந்தியாவின் வடிவம் தெரிகிறது. மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26-ம் தேதி கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேச எழுச்சியின் 3 சக்திகளாக மாறி இருக்கின்றன.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில் இந்தியாவை செழிக்கச் செய்ய வேண்டும். நமது இந்தியாவை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். தற்போது, ​​அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்றுநோக்குகிறது. ஜி20 மாநாட்டில் இந்தியாவின் திறமையைக் கண்டு உலகமே வியப்படைந்திருக்கிறது. பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவின் பகுதியை இன்று இந்தியா அடைந்திருக்கிறது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. தேஜாஸ் போர் விமானங்கள் முதல் ஐ.என்.எஸ். விக்ராந்த் வரை அனைத்தையும் இந்தியாவே தயாரித்து வருகிறது.

இந்தியாவில், நமது தொழில் வல்லுநர்கள் உலகின் பில்லியன் டாலர் நிறுவனங்களை இயக்கி வழிநடத்துகிறார்கள். உலகின் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் மூவர்ணக் கொடியின் பெருமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது இளைஞர்கள் சாதனைகளை முறியடித்து, பதக்கங்களை வெல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று கூறினார்.

Tags: PM ModiStatuesardar patel
ShareTweetSendShare
Previous Post

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல்!

Next Post

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர் மரியாதை!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies