சாதனைகளின் புதிய உச்சத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!
Jun 3, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனைகளின் புதிய உச்சத்தில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், குஜராத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இன்று என் கண்முன்பு சிறிய இந்தியாவின் வடிவம் தெரிகிறது. மாநிலங்கள், மொழிகள், கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26-ம் தேதி கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேச எழுச்சியின் 3 சக்திகளாக மாறி இருக்கின்றன.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில் இந்தியாவை செழிக்கச் செய்ய வேண்டும். நமது இந்தியாவை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். தற்போது, ​​அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இன்று இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்றுநோக்குகிறது. ஜி20 மாநாட்டில் இந்தியாவின் திறமையைக் கண்டு உலகமே வியப்படைந்திருக்கிறது. பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலவின் பகுதியை இன்று இந்தியா அடைந்திருக்கிறது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. தேஜாஸ் போர் விமானங்கள் முதல் ஐ.என்.எஸ். விக்ராந்த் வரை அனைத்தையும் இந்தியாவே தயாரித்து வருகிறது.

இந்தியாவில், நமது தொழில் வல்லுநர்கள் உலகின் பில்லியன் டாலர் நிறுவனங்களை இயக்கி வழிநடத்துகிறார்கள். உலகின் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் மூவர்ணக் கொடியின் பெருமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது இளைஞர்கள் சாதனைகளை முறியடித்து, பதக்கங்களை வெல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று கூறினார்.

Tags: PM ModiStatuesardar patel
ShareTweetSendShare
Previous Post

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல்!

Next Post

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர் மரியாதை!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும் : அண்ணாமலை

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies