போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Jan 14, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவது போன்றது. ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகள் ஏவி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, போரை நிறுத்தினால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களை விடுவிப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில்தான், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவதற்குச் சமம். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் தீவிரவாதத்திடம் சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஆனாலும், இந்தப் போரில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

வெற்றி வரும் வரை காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா எப்படி போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லையோ, அதேபோல அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

மேலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் என்பது இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைய வேண்டும், தீவிரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது போலாகும். ஆகவே, அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கவில்லை, விரும்பவில்லை. ஆனாலும், இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

Tags: Israel PMHamas War
ShareTweetSendShare
Previous Post

அவமதிப்பு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தயார்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies