போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Jul 26, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவது போன்றது. ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகள் ஏவி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, போரை நிறுத்தினால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களை விடுவிப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில்தான், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவதற்குச் சமம். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் தீவிரவாதத்திடம் சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஆனாலும், இந்தப் போரில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

வெற்றி வரும் வரை காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா எப்படி போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லையோ, அதேபோல அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

மேலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் என்பது இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைய வேண்டும், தீவிரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது போலாகும். ஆகவே, அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கவில்லை, விரும்பவில்லை. ஆனாலும், இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

Tags: Israel PMHamas War
ShareTweetSendShare
Previous Post

அவமதிப்பு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தயார்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies