போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Apr 29, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவது போன்றது. ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகள் ஏவி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, போரை நிறுத்தினால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களை விடுவிப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில்தான், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவதற்குச் சமம். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் தீவிரவாதத்திடம் சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஆனாலும், இந்தப் போரில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

வெற்றி வரும் வரை காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா எப்படி போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லையோ, அதேபோல அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

மேலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் என்பது இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைய வேண்டும், தீவிரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது போலாகும். ஆகவே, அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கவில்லை, விரும்பவில்லை. ஆனாலும், இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

Tags: Israel PMHamas War
ShareTweetSendShare
Previous Post

அவமதிப்பு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தயார்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies