போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவது போன்றது. ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகள் ஏவி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் அசுரத்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 8,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 25-வது நாளாக இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, போரை நிறுத்தினால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களை விடுவிப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுசபையும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில்தான், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைவதற்குச் சமம். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் தீவிரவாதத்திடம் சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஆனாலும், இந்தப் போரில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

வெற்றி வரும் வரை காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக இஸ்ரேல் நிற்கும். பேர்ல் ஹார்பர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அல்லது இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா எப்படி போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லையோ, அதேபோல அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுடனான விரோதப் போக்கை நிறுத்த இஸ்ரேல் உடன்படாது.

மேலும், போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள் என்பது இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சரணடைய வேண்டும், தீவிரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது போலாகும். ஆகவே, அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கவில்லை, விரும்பவில்லை. ஆனாலும், இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்” என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

Tags: Israel PMHamas War
Share
Tweet
SendShare
Previous Post

அவமதிப்பு வழக்கில் வலுவான வாதங்களை முன்வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தயார்!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies