2024 தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: கோவா முதல்வர் நம்பிக்கை!
Jul 26, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: கோவா முதல்வர் நம்பிக்கை!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்வதற்காக, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, மதுரை விமானத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பிரமோத் சாவந்த், “எதிர்கட்சிகளின் கூட்டணியை இந்தியா கூட்டணி என்று சொல்லக்கூடாது. அது ’இண்டி’ கூட்டணி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அந்தக் கூட்டணியில் எந்தத் தலைவரும் இல்லை. குறிப்பாக, இந்தியாவை ஆள பிரதமர் நரேந்திர மோடி போன்று எந்தத் தலைவரும் இல்லை. இம்முறை 300 அல்ல 400 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைப்போம்.

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா காணாத வளர்ச்சியை, இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மாற்றி இருக்கிறார். மனிதவள மேம்பாடு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல இடங்களில் வெற்றி பெறுவோம்.

தனிப்பட்ட முறையில் நான் 4 மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும். தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் பா.ஜ.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் செய்த சாதனையை வைத்து 100% மீண்டும் பிரதமராக வருவார். தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செய்திருக்கிறார். இந்த வளர்ச்சிகளின் மூலம் மக்கள் மோடிக்கு வாக்களிப்பார்கள். மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்றார்.

Tags: MaduraiinterviewGoa CM
ShareTweetSendShare
Previous Post

86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Next Post

ஒற்றுமைக்கான ஓட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies