திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?- அண்ணாமலை கேள்வி!
Mar 15, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?- அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Oct 31, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே திமுக முயற்சித்து வருகிறது எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கடந்த 27.09.2023 அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் என் மண் என் மக்கள் பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301 ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு உயர்த்தியிருப்பது குறித்தும், நீலகிரி நகராட்சி, நூறு ஆண்டுகளாக, ஐந்து தலைமுறைகளாக கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் சிறுகுறு வியாபாரிகளை, வெறும் 100 மணி நேரத்தில் கடைகளைக் காலி செய்யச் சொல்லி விரட்டுவது குறித்தும் பேசியிருந்தோம்.

கடந்த 27.09.2023 அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் #EnMannEnMakkal பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301 ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு… pic.twitter.com/KUENuh7k4l

— K.Annamalai (@annamalai_k) October 31, 2023

முறையான அவகாசம் கொடுக்காமல், இத்தனை அவசர கதியில் கடைகளைக் காலி செய்து வெளியேறச் சொல்வது குறித்த சந்தேகத்தையும் எழுப்பியிருந்தோம். கடைகளைக் காலி செய்வதில் நகராட்சியின் அவசரம் குறித்த எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார் திமுக நீலகிரி நகராட்சி உறுப்பினர் முஃப்தாபா.

நீலகிரி நகராட்சித் துணைத்தலைவர், இந்தக் கடைகளைக் காலி செய்ய 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தரும் தகவலை, நகராட்சி கூட்டத்திலேயே வெளியிட்டிருக்கிறார்.

லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதை, திமுக நகராட்சி உறுப்பினரே வெளியிட்டிருக்கிறார். ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றொரு புறம், ஊழலில் திளைக்கும் திமுக நிர்வாகிகள் என தமிழகத்தை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக.

உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே முயற்சித்து வருகிறதே தவிர, ஆட்சியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

காசாவில் தரைவழி தாக்குதலை அதிகரிக்கும் இஸ்ரேல்!

Next Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies