மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையின் அடிப்படையில் மதுபான விற்பனை உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை திங்கட்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 2-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.