நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Jul 28, 2026, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போதிய சாலை வசதிகள் இல்லை. மேலும், மாநிலத்தில் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன. இதனால், பெரும்பாலும் நீர் வழிப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆற்றைக் கடக்க பெரிய படகுகளை பயன்படுத்துகின்றனர். இப்படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி, மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏற்பட்ட படகு விபத்துகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நேரிட்ட விபத்தில் மட்டும் 103 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், மற்றொரு படகு விபத்தில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நைஜீரியாவின் தாரபா மாநிலத்தில் மிகப்பெரிய பென்யூ ஆறு ஓடுகிறது. எல்லாத் தேவைகளுக்கும் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில், அர்டோகோலா மாகாணத்தின் கரீம் லாமிடோ மாவட்டத்தில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு குழந்தைகள், வணிகர்கள் உட்பட்100-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் நடுவழியில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் மற்றும் மீனவர்கள் நீரில் தத்தளித்தவர்களை மீட்க உதவினர். மேலும், தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 14 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.

மேலும், 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்களை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். எனினும், இவ்வளவு நேரம் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags: accidentboatNigeria
ShareTweetSendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு 3 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies