நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி: 70-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போதிய சாலை வசதிகள் இல்லை. மேலும், மாநிலத்தில் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன. இதனால், பெரும்பாலும் நீர் வழிப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆற்றைக் கடக்க பெரிய படகுகளை பயன்படுத்துகின்றனர். இப்படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி, மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏற்பட்ட படகு விபத்துகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நேரிட்ட விபத்தில் மட்டும் 103 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், மற்றொரு படகு விபத்தில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நைஜீரியாவின் தாரபா மாநிலத்தில் மிகப்பெரிய பென்யூ ஆறு ஓடுகிறது. எல்லாத் தேவைகளுக்கும் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில், அர்டோகோலா மாகாணத்தின் கரீம் லாமிடோ மாவட்டத்தில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு குழந்தைகள், வணிகர்கள் உட்பட்100-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் நடுவழியில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் மற்றும் மீனவர்கள் நீரில் தத்தளித்தவர்களை மீட்க உதவினர். மேலும், தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 14 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.

மேலும், 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்களை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். எனினும், இவ்வளவு நேரம் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags: accidentboatNigeria
ShareTweetSendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு 3 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies