உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !
Jul 25, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

Web Desk by Web Desk
Nov 1, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தன்ஜித் ஹசின் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த ஷாண்டோ 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்களிலும் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதையடுத்து லிட்டன் தாஸ் – மஹ்மதுல்லா கூட்டணி நிதானமாக விளையாடி, சீரான இடைவெளியில் இருவரும் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். இந்த கூட்டணி 79 ரன்களை சேர்க்க, வங்கதேச அணி 100 ரன்களை கடந்தது. 45 ரன்கள் சேர்த்து இருந்தபோது இஃப்திகார் அஹ்மது பந்துவீச்சில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்மதுல்லா அரைசதம் கடந்தார். 70 பந்துகளில் 56 ரன்களை சேர்த்த அவர், ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த ஹிரிதாய் 7 ரன்களில் வெளியேறினார். அதேநேரம், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், 43 ரன்கள் அடித்து ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து, மெஹிதி ஹாசன் 25 ரன்களிலும், டஸ்கின் அஹ்மத் 6 ரன்களிலும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதன் காரணமாக, 45.1 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களமிறங்கினர்.

இருவரும் தங்களது பேட்டால் வங்கதேசதின் பந்தை அடித்து நொறுங்கினர். இவர்களின் கூட்டணியை பிரிக்க வங்கதேச வீரர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமலேயே போனது.

ஒரு பக்கம் அப்துல்லா ஷபீக் பௌண்டரிசாக அடிக்க மறுபக்கம் ஃபகார் ஜமான் சிக்சர்களாக அடித்து வங்கதேச அணியை மிரளவைத்தார்.

இறுதியாக இந்தக் கூட்டணி 21 வது ஓவரில் முடிவுக்கு வந்தது. 21 வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 69 பந்துகளில் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் 16 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த 2 ஓவரிலேயே சிறப்பாக விளையாடி வந்த ஃபகார் ஜமான் 7 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 74 பந்துகளில் 81 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

இதில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் அடித்து 21 பந்துகளில் 26 ரன்களையும், இப்திகார் அகமது 2 பௌண்டரீஸ் அடித்து 15 பந்துகளில் 17 ரன்களையும் எடுத்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 32 வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களையும் வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 74 பந்தில் 81 ரன்களை எடுத்த ஃபகார் ஜமான்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: icc world cup cricketpakistan vs bangladesh
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு தினம் இன்று! தமிழக மக்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies