11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2055-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதை விட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.

மேங்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கேள்வி கேட்பதற்காக, மஹுவா மொய்த்ரா துபாயை அடித்தளமாகக் கொண்ட தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து வழக்கறிஞரும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலருமான ஜெய் அனந்த் தேஹாத்ராய் புகார் தெரிவித்தார். மேலும், அது தொடர்பான ஆதாரங்களையும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேவிடம் வழங்கினார். இதையடுத்து, மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டியில் நிஷிகாந்த் துபே புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தது. இந்த விசாரணைக்காக, மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலரான வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான எனது புகாரை நெறிமுறைகள் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், எனது வாக்குமூலத்தையும் நெறிமுறைக் குழுவிடம் அளித்தேன்.

மஹுவா மொய்த்ரா நாளை கமிட்டியின் முன்பு ஆஜராவார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு பேசுவது நல்லது. மேலும், கடந்த 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக கேள்விக்கு 10,000 ரூபாய் வாங்கியதாக 11 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தை விட மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது” என்றார்.

Tags: bjp mpattackMahua moitraNishikant Dubey
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

Next Post

இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மருந்து உருவாக்கபட்டுள்ளது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies