தவறான தகவலால் கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: உறவினர்கள் குற்றச்சாட்டு!
Aug 21, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவறான தகவலால் கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்று கடற்படை வீரர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 8 பேர், கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அப்போது, கத்தார் நாட்டின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவுபார்த்து இஸ்ரேலுக்கு தெரிவிப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கில் மேற்கண்ட 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், மேற்கண்ட 8 பேரும் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டதால்தான் 8 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வீரர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், “ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் கத்தார் நாட்டிடம் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அத்தகவலை அந்நாடு பகிரங்கப்படுத்தவும் இல்லை.

ஆனால், மேற்கு ஆசிய ஊடகங்கள்தான் இந்திய கடற்படையினர் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் உளவு பார்த்ததாக தவறான தகவல்களை பரப்பினர். இதன் காரணமாகவே, 8 இந்திய வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்திய வீரர்கள் யாரும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடவில்லை. கத்தார் நாட்டின் கடற்படைத் திட்டத்துக்கு உதவுவதற்காகவே சென்றனர்.

அதேபோல, இந்திய வீரர்கள் யாரும் நீர்மூழ்கித் திட்டத்தில் பணியாற்றவில்லை. மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனமும், கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கவும், கப்பல்களை பராமரிப்பதற்கும் இத்தாலிய கப்பல் உற்பத்தி நிறுவனமான ஃபின்காண்டியேரியின் துணை ஒப்பந்ததாரராகத்தான் பணியாற்றியது.

மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு ஒரு ஆதரவு தீர்வு வழங்குநராக இருந்தது. அதோடு, தஹ்ரா குளோபல் ஓமனில் உள்ள தஹ்ரா இன்ஜினியரிங் மற்றும் சர்வீசஸ் எல்.எல்.சி.யின் துணை நிறுவனமாகும். மேலும், இந்நிறுவனம் கத்தார் மற்றும் ஜி.சி.சி. நாடுகளை முதன்மையாக ஆதரிக்கிறது.

அந்த வகையில், தஹ்ரா குளோபல் நிறுவனம், கத்தார் கடற்படைக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக, இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் இந்திய கடற்படையில் இருந்தபோது மிகவும் நேர்மையுடனும், மரியாதையுடனும் நாட்டிற்கு சேவை செய்தார்கள்.

அப்படி இருக்க, மேற்கண்ட கடற்படை வீரர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டை சுமத்தி மரண தண்டனை விதித்திருப்பது அவர்களது குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. மேலும், இது இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு விவகாரம். இதை மிகுந்த எச்சரிக்கையுடனும், உணர்வுடனும் கையாள வேண்டும்” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மேற்கண்ட 8 பேரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: INDIANSQatarSentenced
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர மாநில தினம்! பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கேரளா உருவான தினம்! பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies