தவறான தகவலால் கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: உறவினர்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவறான தகவலால் கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: உறவினர்கள் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்று கடற்படை வீரர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 8 பேர், கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அப்போது, கத்தார் நாட்டின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவுபார்த்து இஸ்ரேலுக்கு தெரிவிப்பதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கில் மேற்கண்ட 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், மேற்கண்ட 8 பேரும் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டதால்தான் 8 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக, கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் வீரர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், “ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் கத்தார் நாட்டிடம் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அத்தகவலை அந்நாடு பகிரங்கப்படுத்தவும் இல்லை.

ஆனால், மேற்கு ஆசிய ஊடகங்கள்தான் இந்திய கடற்படையினர் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் உளவு பார்த்ததாக தவறான தகவல்களை பரப்பினர். இதன் காரணமாகவே, 8 இந்திய வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்திய வீரர்கள் யாரும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடவில்லை. கத்தார் நாட்டின் கடற்படைத் திட்டத்துக்கு உதவுவதற்காகவே சென்றனர்.

அதேபோல, இந்திய வீரர்கள் யாரும் நீர்மூழ்கித் திட்டத்தில் பணியாற்றவில்லை. மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனமும், கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கவும், கப்பல்களை பராமரிப்பதற்கும் இத்தாலிய கப்பல் உற்பத்தி நிறுவனமான ஃபின்காண்டியேரியின் துணை ஒப்பந்ததாரராகத்தான் பணியாற்றியது.

மேலும், தஹ்ரா குளோபல் நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு ஒரு ஆதரவு தீர்வு வழங்குநராக இருந்தது. அதோடு, தஹ்ரா குளோபல் ஓமனில் உள்ள தஹ்ரா இன்ஜினியரிங் மற்றும் சர்வீசஸ் எல்.எல்.சி.யின் துணை நிறுவனமாகும். மேலும், இந்நிறுவனம் கத்தார் மற்றும் ஜி.சி.சி. நாடுகளை முதன்மையாக ஆதரிக்கிறது.

அந்த வகையில், தஹ்ரா குளோபல் நிறுவனம், கத்தார் கடற்படைக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக, இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் இந்திய கடற்படையில் இருந்தபோது மிகவும் நேர்மையுடனும், மரியாதையுடனும் நாட்டிற்கு சேவை செய்தார்கள்.

அப்படி இருக்க, மேற்கண்ட கடற்படை வீரர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டை சுமத்தி மரண தண்டனை விதித்திருப்பது அவர்களது குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. மேலும், இது இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு விவகாரம். இதை மிகுந்த எச்சரிக்கையுடனும், உணர்வுடனும் கையாள வேண்டும்” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மேற்கண்ட 8 பேரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: QatarSentencedINDIANS
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர மாநில தினம்! பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கேரளா உருவான தினம்! பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies