11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2055-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதை விட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.

மேங்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கேள்வி கேட்பதற்காக, மஹுவா மொய்த்ரா துபாயை அடித்தளமாகக் கொண்ட தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து வழக்கறிஞரும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலருமான ஜெய் அனந்த் தேஹாத்ராய் புகார் தெரிவித்தார். மேலும், அது தொடர்பான ஆதாரங்களையும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேவிடம் வழங்கினார். இதையடுத்து, மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டியில் நிஷிகாந்த் துபே புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தது. இந்த விசாரணைக்காக, மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலரான வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான எனது புகாரை நெறிமுறைகள் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், எனது வாக்குமூலத்தையும் நெறிமுறைக் குழுவிடம் அளித்தேன்.

மஹுவா மொய்த்ரா நாளை கமிட்டியின் முன்பு ஆஜராவார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு பேசுவது நல்லது. மேலும், கடந்த 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக கேள்விக்கு 10,000 ரூபாய் வாங்கியதாக 11 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தை விட மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது” என்றார்.

Tags: bjp mpattackMahua moitraNishikant Dubey
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

Next Post

இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மருந்து உருவாக்கபட்டுள்ளது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies