11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!
Jul 7, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட மஹுவா விவகாரம் சீரியஸானது: பா.ஜ.க. எம்.பி.!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2055-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், அதை விட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.

மேங்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கேள்வி கேட்பதற்காக, மஹுவா மொய்த்ரா துபாயை அடித்தளமாகக் கொண்ட தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து வழக்கறிஞரும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலருமான ஜெய் அனந்த் தேஹாத்ராய் புகார் தெரிவித்தார். மேலும், அது தொடர்பான ஆதாரங்களையும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேவிடம் வழங்கினார். இதையடுத்து, மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்ற ஒழுங்கு கமிட்டியில் நிஷிகாந்த் துபே புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தது. இந்த விசாரணைக்காக, மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலரான வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோர் ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால், எனது தலைமுடியைக் கூட தொட முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான எனது புகாரை நெறிமுறைகள் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், எனது வாக்குமூலத்தையும் நெறிமுறைக் குழுவிடம் அளித்தேன்.

மஹுவா மொய்த்ரா நாளை கமிட்டியின் முன்பு ஆஜராவார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு பேசுவது நல்லது. மேலும், கடந்த 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக கேள்விக்கு 10,000 ரூபாய் வாங்கியதாக 11 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தை விட மஹுவா மொய்த்ரா விவகாரம் சீரியஸானது” என்றார்.

Tags: bjp mpattackMahua moitraNishikant Dubey
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

Next Post

இந்திய சிவப்புத் தேள் கடிக்கு மருந்து உருவாக்கபட்டுள்ளது!

Related News

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies