பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
Jun 4, 2025, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 1, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேசமயம், மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

இம்மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜுஜூ, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

தொடர்ந்து, மிசோராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ​​மிசோராம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வெகு தொலைவில் இருந்தன. அதேசமயம், அவை நம் இதயங்களிலிருந்தும் வெகு தொலைவில் இருந்தன என்பதுதான் வேதனை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வடகிழக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

நான் கடந்த 20 வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வருகிறேன். இந்தப் பகுதியை இணைப்பதில் பெரும் சிக்கல் இருந்தது. வடகிழக்கில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களுக்குச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. நேரடியான வழி இல்லை. ஆனால், இன்று ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் டெல்லியுடன் நேரடி இணைப்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு மாநிலமும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வடகிழக்கில் 8 விமான நிலையங்கள் மற்றும் 1 நீர்வழித் தடம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது வடகிழக்கில் 17 விமான நிலையங்கள் மற்றும் 18 நீர்வழித் தடங்கள் இருக்கின்றன. மேலும், கடந்த 9 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. எனினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.

எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே வளர்ச்சியடையாத வரை வலுவான, வளமான, தன்னம்பிக்கையான இந்தியா என்ற கனவு நிறைவேறாது. புதிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர பொதுமக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, பா.ஜ.க.வுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

மேலும், மணிப்பூரில் உள்ள மெயிட்டி மற்றும் கூகி சமூக மக்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங், பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

Tags: Rajnath SinghMizoram
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் விவரம் !

Next Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Related News

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies