பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் தலைமையில் வடகிழக்கு அபார வளர்ச்சி: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதேசமயம், மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நாங்கள் வேதனை அடைந்திருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

இம்மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் மிசோராம் மாநிலமும் ஒன்று. இம்மாநிலத்தில் வரும் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜுஜூ, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.

தொடர்ந்து, மிசோராமில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ​​மிசோராம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வெகு தொலைவில் இருந்தன. அதேசமயம், அவை நம் இதயங்களிலிருந்தும் வெகு தொலைவில் இருந்தன என்பதுதான் வேதனை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வடகிழக்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

நான் கடந்த 20 வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வருகிறேன். இந்தப் பகுதியை இணைப்பதில் பெரும் சிக்கல் இருந்தது. வடகிழக்கில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களுக்குச் செல்வது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. நேரடியான வழி இல்லை. ஆனால், இன்று ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் டெல்லியுடன் நேரடி இணைப்பைக் கொண்டுள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு மாநிலமும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, வடகிழக்கில் 8 விமான நிலையங்கள் மற்றும் 1 நீர்வழித் தடம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது வடகிழக்கில் 17 விமான நிலையங்கள் மற்றும் 18 நீர்வழித் தடங்கள் இருக்கின்றன. மேலும், கடந்த 9 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. எனினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.

எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள் உண்மையிலேயே வளர்ச்சியடையாத வரை வலுவான, வளமான, தன்னம்பிக்கையான இந்தியா என்ற கனவு நிறைவேறாது. புதிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர பொதுமக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, பா.ஜ.க.வுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

மேலும், மணிப்பூரில் உள்ள மெயிட்டி மற்றும் கூகி சமூக மக்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங், பிரச்சனையை பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

Tags: Rajnath SinghMizoram
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : புள்ளி பட்டியல் விவரம் !

Next Post

ஜப்பானை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies